×

மாணவர் விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு

 

விருதுநகர், நவ. 26: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் திட்டப்பணிகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் நேரடியாக சென்று சேர்வதற்கு அரசின் விதிமுறைகள் உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவ, மாணவியர் விடுதிகளை வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டுமென தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ ரவிக்குமார், திட்ட இயக்குநர் தண்டபாணி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post மாணவர் விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Collector ,Collector ,Jayaselan ,District Monitoring Officer ,Anandakumar ,Dinakaran ,
× RELATED வெள்ளை ஈ, வாடல் நோய் தாக்கிய தென்னை...